கிராம மக்களின் தாகம் தீர்க்கும், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்.


வேப்பனஹள்ளி தொகுதிகுட்பட்ட சூளகிரி ஒன்றியம் சின்னாரன்தொட்டி ஊராட்சி, மலகலக்கி  கிராமத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் புதிதாக நீர்தேக்க தொட்டி  அமைக்க  ஒன்றிய பொது நிதியிலிருந்து உடனடியாக ரூ.12,00,000 .இலட்சம் ஒதுக்கி உத்தரவு ஆணை பிறப்பித்தார்


இந்த நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர்  திருமதி. H.லாவண்யா, Avm.ஹேம்நாத் அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த நமது Chairman அவர்களுக்கு சின்னாரன்தொட்டி ஊராட்சி பொது மக்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துகொண்டனர். 


இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், சுப்பிரமணி, ஒன்றிய குழு உறுப்பினர் நாகேஷ், ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன், மு.ஊராட்சி மன்ற தலைவர் சீனப்பா கவுடு, ராமகிருஷ்ணப்பா, ராமசந்திரன், கோவிந்தப்பா, முனியப்பா, வெங்கடேஷ், ஊராட்சி கழக செயலாளர் ,பொரியாளர்-தீபாமணி,மற்றும் ஊர் பொதுமக்கள் பலர்கலந்துகொண்டனர். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form