நமது கிராமசபை இயக்கத்தின் சார்பாக புதிய தக்காளி கூல் அரைக்கும் தொழிற்சாலை பாலக்கோடு வட்டம் தண்டகாரண்ய ஊராட்சியில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் திரு விநாயகமூர்த்தி, மாநில செயலாளர் ஆனந்தன், மாநில பொருளாளர் தேவராஜ், துணைத் தலைவர் சிவக்குமார். துணைச் செயலாளர் டிபி. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் அழைப்பாளர்களாக தண்டுகாரனஅள்ளி ஊராட்சி தலைவர் திரு. மணி அவர்கள் மற்றும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை தலைவர் திரு. கோவிந்தசாமி அவர்களும், மற்றும் ஒப்பந்ததாரர் மாதன், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில நிர்வாக உறுப்பினர்கள் கிருஷ்ணன், மாதப்பன் சௌந்தரபாண்டியன், சங்கர், கிளை பொறுப்பாளர்கள் பார்த்திபன், ரவிச்சந்திரன், மணி, ஞானவேல், வேல், சிவம், விஜயராகவன், செல்வராஜ், சக்திவேல் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Tags:
பாலக்கோடு