தருமபுரி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், கொரோன வைரஸ் பரவுவதை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தேவையான நோட்டீஸ் மற்றும் முகக்கவசங்களை திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி வழங்கினார்.
இதனை பேராசிரியர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் கல்லூரி மாணவர்கள் , மாணவிகள், பொதுமக்களுக்கு வழங்கி கொரானா வைரஸ் தடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் தன்னார்வலர்கள் கட்சித் தொண்டர்கள் இளைஞர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி தர்மபுரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றும் 3வது அலையை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி வெற்றி காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Tags
தருமபுரி
