இந்த ரயில் நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ஈரோடு. கோவை. சேலம். சென்னை. மதுரை என பல ஊர்களுக்கு பயணம் செல்கிறார்கள் இந்த தடத்தில் தற்போது ஏற்காடு விரைவு வண்டி ஓடிக்கொண்டு தான் இருக்கிறது எனவே வழித்தடத்தில் மீண்டும் ஏற்காடு வண்டி நின்று செல்ல வேண்டும் அதுபோல் ஜோலார்பேட்டை முதல் ஈரோடு வரை தொடர்வண்டி இயக்க வேண்டும், இந்த ரயில் நிலையத்தின் அருகில் சுமார் 10 க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளது அதுமட்டுமல்லாமல் சாமந்திப்பூ ஆயுத பூஜை காலத்தில் இந்த நிலையத்தில் இருந்துதான் ஏற்காடு விரைவு வண்டியில் டெல்லி வரை செல்கிறது,
எனவே பொதுமக்கள் நலன் கருதி கோட்டம் மேலாளர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திரு. G.M ஸ்ரீனிவாசன் மாவட்ட செயலாளர் மக்கள் நீதி மையம், திரு. ஜெபஸ்டின் மெரிஸ்வி பள்ளி தாளாளர், திரு. பரமசிவம் காங்கிரஸ் கட்சி, கிழங்கு மில் அதிபர் திரு. பூமணி, பாட்டாளி மக்கள் கட்சி திரு. ஜான், கவுன்சிலர் பையர் நத்தம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளார்.