தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பி. செட்டிஹள்ளி ஊராட்சியில் ஊராட்சியின் 2006 முதல் 2021 வரையிலான அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட ஆகஸ்ட் 28 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2(j) படி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
குறிப்பில் உள்ள தகவல்களை செப்டம்பர் 6ஆம் தேதி நகல்களாக வழங்க ஊராட்சி செயலர் உறுதி அளித்துள்ளார். நகல்கள் கிடைத்தவுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இயக்கத்தின் சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.