Trending

தாள நத்தம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற நிர்வாகம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அருகே பாலவனத்தம் கிராமத்தில் சுமார் 1500 வீடுகள் உள்ளது இந்த நிலையில் சுமார் இரண்டு மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் இதை தொடர்ந்து கடத்தூர் BDO-விடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.

இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவே தாளநத்தம் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும். மேலும் குடிநீர் வினியோகம் முறையான தினசரி வழங்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வேண்டுகோள் வைத்து உள்ளார்கள்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form