அரூரில் யாசட் மையத்தில் அண்ணல் அம்பேத்கர் இரவுநேர பாடசாலை திட்டம் துவங்கியது.
இளைஞர்களின் பெரும் முயற்சியால் நீண்ட நாள் கனவான இரவு நேர பாடசாலை திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரவு நேர பாடசாலை திட்டம் தினந்தோறும் மாலை ஐந்து முப்பது மணி அளவில் இருந்து 8 மணி வரை நடைபெறும். முதல் நாளான இன்று சுமார் 20 பள்ளி சிறுவர்கள் அண்ணல் அம்பேத்கர் இரவு நேர பாடசாலை வகுப்பில் பயின்றனர்.யாசட் இளைஞர்களின் பெரும் முயற்சியால் இரவு நேர பாடசாலை திட்டத்திற்கான கனவு நினைவாகி உள்ளது, இளைஞர்களின் சீரிய முயற்சிகளை அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.