ஏரியூரில் கலை கல்லூரி அமைக்கப்படும் அமைச்சர் அறிவிப்பு.

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வந்துள்ளன அதில் தர்மபுரி மாவட்டத்திற்கு புதிதாக இருபாலர் இருக்கக்கூடிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். 

இந்தக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆனது தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அமைய இருக்கின்றது, ஏற்கனவே தர்மபுரியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இருப்பது குறிப்பிடத்தகுந்த விஷயம், கல்வி அறிவு பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் தர்மபுரியில் இதுபோன்று இரு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருப்பது மாணவர்களின் கல்வித்திறன் இன்னும் மேம்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

பெண்ணாகரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் ஏற்கனவே இருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் மின்னணு நூலகங்கள் தரம் உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form