தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோவின்) மூலமாக குறுகிய கால (ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோவின்) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்களுக்கு குறுகிய கால (ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.
மாணாக்கர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ / மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள தாட்கோவின் www.training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியினை கொண்டு இத்திட்டத்தின் மூலம் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மாணவ / மாணவியர்களுக்கு போக்குவரத்து படிகள் வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு SCVT / SSC சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்று பெற்ற பயிற்சியாளர்கள் மாவட்ட மேலாளரிடம் தாங்கள் பயின்ற பயிற்சிக்கு தொடர்பான தொழில் தொடங்கிட, http://.application.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து தொழில் முனைவோர் திட்டம் (EDP) மற்றும் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு (SEPY) திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க ஆவண செய்யப்படும். ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆட்சித் தலைவர் தலைவர் திருமதிச.திவ்யதர்சினி., இ.ஆ.ப., அவர்கள் இவ்வாறு மாவட்ட தெரிவித்துள்ளார்.