அரூர் அருகே வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய ஆண் சடலம்: போலீசார் விசாரணை.
மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி விசாரித்ததில், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஜானகியம்மாள் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் என்பதும் இவர் கோட்டப்பட்டி அருகே மாலக்கல் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் கோபால்(30) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் தீபா என்ற மனைவி உள்ளது தெரியவந்தது. பிரேதத்தை அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபால் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணையில் நடத்தி வருகின்றனர்.