மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்: தப்பி ஓடியவருக்கு போலீசார் வலை.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கீழ் செங்கப்பாடி கிராம பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்துவதாக கோட்டப்பட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கோகுல் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் மகன் கோபி என்பவர் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு இருந்தார் போலீசாரைக் கண்டதும கோபி தப்பி ஓடினார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை மணலுடன் போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
Tags:
அரூர்