Trending

மதுவிற்காக தொப்பூர் கனவாய் பகுதியில் 4 பேர் பலி.

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக அங்கு மதுக்கடைகளை அரசு திறக்க அனுமதியளிக்கவில்லை, இதனால் சேலம் மாவட்ட எல்லையோர மக்கள், தருமபுரி நோக்கி படையடுக்க தொடங்கினர்.
சேலம் மாவட்டம் ஐலகண்டாபுரத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் 2 பைக்கில் மது வாங்குவதற்கு தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள மதுகடையில் மது வாங்கிக்கொண்டு ஜலகண்டாபுரம்  திரும்பிய நிலையில் தொப்பூர் கனவாய் பகுதியில் எதிரே சென்ற லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி, இத்தகவல் அப்பகுதி மக்களை பயம் கொள்ள வைத்துள்ளது. மது கடைகள் திறந்ததின் விளைவு இன்று 4 உயிர் பறிபோகும் நிலை என அப்பகுதி மக்கள் குமுருக்கின்றனர்.
இரு மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் தடுக்கவேண்டும்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

1 Comments

Previous Post Next Post

Contact Form