கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு அரசின் கடனுதவி.

ஆதிதிராவிட மக்கள், கொரோனா தோற்று பாதிப்புக்குள்ளாகி குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் இறந்திருப்பின் அவர்ளின் குடும்பம் வாழ்வாதாரத்தை முன்னேறட்டும் வகையில் National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC) நிறுவனத்தில் ASHA என்ற திரும்ப செலுத்தும் கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மற்றும் அத்திட்டத்திற்கான வரைவு வழிகாட்டுதலில் National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC) மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன் விவரம் கீழ்கண்டவாறு.


1. பயனாளிகள் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக வேண்டும்.

2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்த்திற்குள் இருக்கவேண்டும். 

3. குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய இறந்தவரின் வயது 18 முதல் 60க்குள் இருக்கவேண்டும்.

4. இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ.5.00 இலட்சம் வரை இருக்கலாம்.

5. திட்டத்தொகை 80% சதவீதம் அல்லது ரூ.3.00 இலட்சம் வரை இருக்கலாம்.

6. மீதமுள்ள 20% சதவீதம் (அல்லது ரூ.1.00 இலட்சம்) அதிகபட்சம் ரூ. 4.00 இலட்சம் வரை கடன் NSFDC நிறுவனத்தால் வழங்கப்படும்.

7. இக்கடனுக்கு ஆண்டுக்கு 6.5% சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் கடனை 6 ஆண்டுகளுக்கு திரும்ப செலுத்தலாம்.

8. குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியர் கொரோனா தொற்றினால் இறந்துள்ளார் என சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சமர்பிக்கப்படவேண்டும், (ASHA திட்டத்தின் வழிமுறைகளில் வரிசை எண் 4ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்படி இக்கடனுக்கு விவரங்களை அறிய தாட்கோ மாவட்ட மேலாளர், தருமபுரி அவர்களிடத்தில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண். 04342 260007 மூலம் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச. திவ்யதர்ஷினி., இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.