இன்று முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா தோற்று அதிகம் உள்ளதால் அங்கு ஊரடங்கு தளர்வு இல்லாததால், சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுத்து வரத்தொடங்கி விட்டனர். மேலும் சேலம், தீவட்டிப்பட்டி பூசாரிபட்டி ஓமலூர் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனம் மூலமும் சிலர் மது பிரியர்கள் நடந்து வந்தும் மது வாங்க வருகிறார்கள். இதனால் தொப்பூர் மாறட்டும் மாவட்ட எல்லையில் உள்ள கிராமங்களில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி அச்சம் தெரிவித்தனர், இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டுனர்.
Tags:
தொப்பூர்