கடத்தூரில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு 3 ஆண்டு கால பட்டயப் படிப்பிற்கான (டிப்ளமோ) விண்ணப்பம் இணையதளத்தில் https://www.tngptc.in (or) https://tngptc.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இப்பயிலக வளாகத்திலேயே மாணவர் மற்றும் மாணவியருக்கு பாதுகாப்பான தனித்தனி விடுதி வசதிகள் உள்ளது. இதனை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) திரு. ம. ஜெயபால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்: 25.06.2021
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 12.07.2021
சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 04346-265355, 8248673282, 8667480279 மற்றும் 9003505854 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட செய்திகளுக்கு நமது தகடூர் குரல் செய்தி இணையதளம்.
விளம்பரம் மற்றும் செய்தி தொடர்பிற்கு : 9843 663 662 / thagadurkuralmedia@gmail.com
Tags:
கடத்தூர்