ஓசூரில் பிரபல ரௌடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசநத்தம் பகுதியில் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய அலசநத்தம் மல்லேஷ் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது 39). இவர் மீது ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது ஆள் கடத்தல் வழக்கு ஒன்றில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இவரை குண்டர் சட்டத்தில்
சிறையில் அடைக்க ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் முரளி, ஓசூர் நகர காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்விக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, அலசநத்தம் மல்லேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.