கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பாலேப்பள்ளி ஊராட்சியில், ஊரகவளர்ச்சித்துறை சார்பாக மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ. 3 இலட்சம் மதிப்பில் புதியதாக 10 வீடுகள் ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் இன்று (29.6.2021) பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பாலேப்பள்ளி ஊராட்சியில், ஊரகவளர்ச்சித்துறை சார்பாக கட்டப்படும் கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:
பருகூர்