தருமபுரியில் வரும் 10-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்; இதெற்கெல்லாம் தீர்வு காணலாம்.

தருமபுரி மாவட்டத்தில் வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த லோக் அதாலத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உதவியுடன் சமரசம் செய்ய கூடிய வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இரு தரப்பினருக்கும் சமரச முடிவு எடுக்கப்படும்.

இதன்படி மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு, காசோலை மோசடி, உரிமையியல், குடும்ப பிரச்சனை, சமரச குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். மேலும், வருகின்ற 10ந் தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக வரும் 5.07.2021 முதல் தினசரி பிற்பகல், வழக்குகளை சமரசம் பேச வழக்கு சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய, மேற்கண்ட பிரிவு வழக்குகளில் பொது மக்கள் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம் என முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவருமான மு.குணசேகரன் தெரிவித்துள்ளார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form