பேருந்தை உடைத்த சைக்கோ இளைஞர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் விஜய். மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் சூளகிரி பேருந்து நிலையத்தில் சுவர் மீது அமர்ந்திருந்து கொண்டு அவரது கையில் பெரிய இரும்பு பைப் மற்றும் கத்தியை வைத்துக்கொண்டு அந்த வழியாக செல்பவர்களை மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர் காவல் துறையினர் வந்து விஜய்யை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் மீது விஜய் கல்லை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்துள்ளார். இதேபோல் அங்குள்ள பேக்கரி முன்பு சென்று பேக்கரியின் கண்ணாடியை உடைத்துள்ளார் .தொடர்ந்து விஜய் சைக்கோ போல் நடந்து வருகிறார்.

எனவே, தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சைக்கோ வாலிபர் விஜய்யை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form