சாலையில் விழுந்த மூதாட்டி பலி.


பர்கூர் தாலுகா ஒப்பதவாடி வரதப்பன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 65). சம்பவத்தன்று இவர் மொபட்டில் ஒப்பதவாடி காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் சாலையில் ஓரத்தில் சரிந்து விழுந்தது. இதனால் படுகாயம் அடைந்த ஈஸ்வரி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனளிக்காததால். 

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டர், அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form