கடை சுவற்றில் துளையிட்டு திருட்டு.


ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 45). இவர் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் இருசக்கர, 4 சக்கர வாகனங்களுக்கான பேட்டரிகள் விற்பனை கடை வைத்துள்ளார்.


சம்பவத்தன்று அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பின்புற சுவரில் துளையிடப்பட்டிருந்தது. மேலும் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த 2 சக்கர, 4 சக்கர வாகனங்களுக்கான 20 பேட்டரிகள் திருட்டு போயிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இது குறித்து சம்சுதீன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.


அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form