ஓசூர் அருகே ரேஷன் பொருள் கடத்தியவர் சிறையில் அடைப்பு கெலமங்கலம் காவல்துறையினர் விசாரணை

ரேஷன் பொருள் கடத்தியவர் சிறையில் அடைப்பு கெலமங்கலம் காவல்துறையினர் விசாரணை


கிருஷ்ணகிரி கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்கேரி பேருந்து நிலையம் பகுதியில் கெலமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன்  சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சர்க்கரை முதல் நிலை காவலர் தண்டபாணி, தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் 

அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் கர்நாடக மாநிலம் ஆணைகள் பகுதிக்கு இரண்டரை டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது 

வாகனத்தை மடக்கி பிடித்தனர் பொலிசார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மங்களபட்டி கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவரின் மகன் வாகன ஓட்டுனர் அஜித்குமார் 24 வயது என விசாரணையில் தெரியவந்தது குடிமைப்பொருள் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் அஜித் குமாரை கைது செய்த போலீசார் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அஜித்குமார் சிறையில் அடைத்தனர்

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form