வீட்டை உடைத்து பைக், தங்கம் திருட்டு; போலீசார் விசாரணை.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள பி.ஆர்.ஜி மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சுதர்சன் (வயது 23), இவர் நேற்று தனது வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டை மட்டும் பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார்.


பின்னர் திரும்பி வரும்போது வீட்டின் உள் கதவு திறக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 10 பவுன் தங்க காசு மாலை மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் உடனடியாக இதுகுறித்து கந்திகுப்பம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பீரோவில் பதிவான கைரேகையை பதிவு செய்து கொண்டனர்.


மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form