மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய பிராண்ட்லைன் யூத் கிளப் அமைப்பினர்.


தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழன் தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடடுப்பூசி செலுத்தும் முகாம்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் பல மாற்றுத்திறனாளிகள் பங்குபெற்று கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர், முகாமில் பிராண்ட்லைன் யூத் கிளப் சார்பாக தன்னார்வத் தொண்டர்களாக பங்கு பெற்று மாற்றுத்திறனாளிகள் தகடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்து செல்ல இலவச வாகன வசதி செய்துகொடுத்தனர் மற்றும் தடுப்பூசி முகாமிற்கு வந்த அனைவர்க்கும் தண்ணீர் உபகரணங்களை வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வை ண்ட்லைன் யூத் கிளப் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள். 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form