ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை, பள்ளிமுத்தனூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி தனம் (வயது 45). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தனம் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படாததாலும், தொடர்ந்து வயிற்றுவலி இருந்து வந்ததன் காரணமாகவும் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ இலைகளை அரைத்து குடித்துள்ளார்.
பின்னர் வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
பென்னாகரம்