கிராம மக்களின் குடிநீர் தேவைக்கு ஈடு செய்ய புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி.


தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் ஒன்றாக மொரப்பூர் ஒன்றியம் மொரப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இராசலம்பட்டி, மோட்டூர் கிராமங்களில், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய PMAGY ஆதிதிராவிடர் நலத்துறை திட்டத்தில் 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை  நடைபெற்றது, மற்றும் கான்கிரீட் சாலை, மற்றும் குடிநீர் பைப்லைன் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது இந்நிகழ்வில் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. மாதையன், திரு. ஆனந்தன், உதவி பொறியாளர் திரு. முருகன், பணி மேற்பார்வையாளர் திருமதி. சுகந்தி, மொரப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. உமாராணி உலகநாதன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form