தருமபுரி மாவட்டம், வத்தல் மலையில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கூடுதல் ஆட்சியர் வைத்திநாதன் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பணியில் இருந்த மருத்துவரிடம் நோயாளிகள் விபரம், கர்ப்பிணி பெண்கள் விபரம், கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் விபரம் மற்றும் அவர்களின் தேவை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் விவரம் சேகரித்து அவர்களை தடுப்பூசி போட்டு கொள்வதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து தடுப்பூசி போட்டு கொள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டும் சுகாதார துறையினருக்கு கூடுதல் ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.
Tags:
தருமபுரி