தர்மபுரி நகர பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு சாலையில் உள்ள வேகத் தடை அனைத்தும் நீக்கப்பட்டன, சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேகத் தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் தினந்தோறும் அந்த வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன
முக்கியமாக இலக்கியம்பட்டி பகுதியில் தினந்தோறும் இரண்டு விபத்து நடைபெறுகிறது நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார் இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்