பென்னாகரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் பெண்கள், குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பென்னாகரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் வட்டுவன அள்ளி ஊராட்சி ஜெல்மாரம்பட்டி கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பிரச்சனைகள் சம்மந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி கலந்துரையாடல் நடைபெற்றது.இந் நிகழ்ச்சியில்ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.மாதம்மாள் - கோவிந்தசாமி தலைமை வகித்தார்.திருமதி.மு.சிவகாந்தி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், வட்ட சட்டப் பணிகள் குழு மூலமாக.திரு. ஆர் . ஜானகிராமன் வழக்கறிஞர்,சமுக ஆர்வலர் யூனிசெப்.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி கருத்துரை வழங்கினார்கள்.இதில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் என் .சிவக்குமார் நன்றி கூறினார்.