மொரப்பூர்: தூய்மை இந்தியா இருவார விழா கொண்டாட்டம்.

தூய்மை இந்தியா திட்ட இருவார விழா ஆகஸ்ட் 1முதல் 15 வரை  தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா வுடன் இணைந்து பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகிறது அதன் ஒரு பகுதியாக போளயம்பள்ளி ஏ.பி.ஜே அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் 13-08-2021 அன்று ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் அப்துல்கலாம் நற்பணி மன்றத்தின் செயலாளர் ர.திருவேங்கடம், மற்றும் உறுப்பினர்கள் இணைந்து  மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.இதில் போளையம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் கலைமணி மாயக்கண்ணன் மற்றும்  நேரு யுவ கேந்திரா மொரப்பூர் ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர்  திரு.ஆ.ஞானராஜ்,மு.சேதுபதி உடன் இருந்து தலைமை தாங்கி சிறப்பித்தனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form