அரூர் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் திருட்டு: போலீசார் விசாரணை.
இன்று 27ம் தேதி காலை வீரபத்திரன் கோவில் கதவு உடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பவுன் நகை, 250 கிராம் வெள்ளி, இரண்டு உண்டியல் காணாமல் போனது தெரிந்தது. கோட்டப்பட்டி போலீசில் கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரூர் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.