அரூர் அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு கரோனா தடுப்பூசி.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அரசு அறிவித்தது. தர்மபுரி மாவட்டம், அரூரில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் கரோனோ தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத 18 வயது நிரம்பிய இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கண்டறிந்து கல்லூரி தொடக்க நாளிலிருந்து தினமும் 100 நபருக்கு அரூர் வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியம் தலைமையில் தாசில்தார் கனிமொழி முன்னிலையில் மருத்துவ குழுவினர் கரோனா தடுப்பூசி செலுத்தினர்.
Tags:
அரூர்