தடுப்பூசி செலுத்திக்கொள்ள இலவச வாகன வசதி.


தருமபுரி நகரப் பகுதியில் வாழும் அனைத்து சமூகமக்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தருமபுரி மாவட்டம் சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் பல்வேறு மக்கள் நல பணிகளை செய்து வருகிறோம் அதனடிப்படையில் 24/6/2021 வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் இலக்கியம்பட்டி நீச்சல் குளம் அருகில் உள்ள செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்காண அரசு மேல்நிலைப்பள்ளியில்   நடைபெற  இருக்கும் மாற்றுத்திறனாளிகள் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது முகாமிற்கு வந்து தடுப்பூசி போட இயலாத  மாற்றுத்திறனாளிகள்மேற்கண்ட

9443212388, 9944993738, 9944492412 

இந்த மூன்று தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் உங்களை வீட்டிலிருந்து அழைத்து சென்று தடுப்பூசி போடுவதற்கு இலவசமாக வாகனம் மூலம் ஏற்பாடு செய்து தருகிறோம் அனைத்து சமுதாயத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தருமபுரி ஆட்சியர் ஏற்பாடு செய்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் அதேபோல உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த செய்தியை கொண்டு செல்லுமாறும் 24/6/2021 வியாழக்கிழமை நடக்க இருக்கின்ற தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொரானா என்று சொல்லக் கூடிய கொடிய  நோயை விரட்டி அடிப்போம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

என மாவட்ட தலைவர் ஜகான்ஹிர் தெரிவித்துள்ளார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form