நாடகக் கலைஞர்கள் மற்றும் இசை குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாடக கலைஞர்கள் மற்றும் இசைக்குழுவினருடன் இணைந்து காவல்துறையினர் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் நாடகத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இந்நிகழ்வில் பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  திரு.சௌந்தரராஜன் அவர்கள் கலந்துகொண்டு நாடகக் கலைஞர்கள் மற்றும் இசை குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். உடன் காவல் ஆய்வாளர் திரு தொல்காப்பியம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இருந்தனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form