தருமபுரி பிடமனேரி காளி அப்பசட்டி காலனியில் மது பிரியர்களின் அட்டகசங்களால் தினந்தோறும் பாதிக்கப்படும் அப்பகுதி மக்களில் பெண்மணி ஒருவர் பின்வருமாறு கூறினார்.
குடிமகன்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் கடந்த, இரண்டு வருடங்களாக, இப்பொழுது தான் நாங்களும் காவல்துறையை அணுகினோம், ஆனால் காவல்துறை அதிகாரி இடமும் அந்தக் குடிமகன் நடந்து கொண்ட விதம் தான் வெட்கக்கேடாக இருந்து அந்த, அதிகாரியும் அன்று மிரட்டிவிட்டு தான் சென்றார்,, யார் வந்தால் தான் என்ன நான் அப்படித்தான் இருப்பேன் என்று அந்தக் குடிமகன் ஆட்டம் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார், தயவுசெய்து, ஒருவராவது எனக்கு இதுக்கு தீர்வை காண உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு என்ன பயம் என்றால் இந்தக் காலத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை நான் ஒரு பெண் குழந்தையை பெற்று உள்ளேன் பெண், குழந்தையை நான் எப்படி இப்பேர்ப்பட்ட குடிகாரனின் முன் நான் வளர்ப்பது அதற்குக் காரணம் என்னவென்றால் ஒரு நாளைக்கு 20 குடிமகன்களாவது இங்கு வந்து தினமும் குடித்து விட்டு செல்கிறார்கள் எனக்கு பயம் இருக்குமா இருக்காதா? என அந்த பெண்மணி கூறினார், இப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.
Tags:
தருமபுரி