இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படடுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்துக்குள் இருக்கவேண்டும், குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய னாரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5.00 இலட்சம் வரை இருக்கலாம், திட்டத்தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4.00இலட்சம் வரை கடன் வழங்கப்படும், மீதமுள்ள 20சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும், ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனா வைரசால் உயிரிழந்தற்கான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி., இ. ஆ. ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.