கொரோனவால் உயிரிழந்தோர் நினைவாக குறுங்காடுகள்.

கொரோனவால் உயிரிழந்தோர் நினைவாக ஆக்சிஜனை அதிகரிக்க குறுங்காடுகள் தொடங்கி வைத்த சார் ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பேட்டரப்பள்ளியில் உள்ள  ஏரியில் கொரோனோ நோய்த் தொற்று காரணமாக இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆக்கிஜன் பற்றாகுறை, சுற்று சூழல் பாதிப்பு, போதிய உடல் ஆரோக்கியம் பராமரிப்பு இல்லாதது, போன்ற பல்வேறு குறைபாடுகளால் நோய்த் தொற்று எளிதில் மனிதனை தாக்குகிறது. இதனை தற்போதைய கொரொனோ காலம் மனிதர்களுக்கு பெரிய பாடத்தை தந்துள்ளது.

இதனால் மரக்கன்றுகள் நடவு செய்வதன் மூலமாக ஆக்கிஜன் அதிகரிப்பதும், சுற்று சூழல் பாதுகாப்பு கிடைக்க வழி ஏற்படுகிறது.  மேலும் கொரோனோ நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறும் போது ஆக்கிஜன், உடல் ஆரோக்கியம் , மரக்கன்றுகளின் அவசியம் உள்ளிட்டவற்றை பொது மக்கள் எண்ணி பார்க்கத்தோன்றும். அதனை வலியுறுத்தும் வகையில் ஓசூர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தொழிலாளர்கள் நடை பயிற்சி செல்லும் பேட்டரப்பள்ளி ஏரியில் 500 மரக்கன்றுகள் நடவு செய்ய பட்டது. 
நீண்ட கால வளர்ச்சி கொண்ட பனை, ஆலமரம், தென்னை, அத்தி மரம், பாதம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனர். இது குறித்து கூறிய தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான  செந்தில் செய்தியாளர்களிடம் கூறியபோது, கொரோனோ பெறும் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறோம். 2018 முதல் 10 ஆயிரம் பனை மரங்கள், 6 ஆயிரம் மரக்கன்றுகள்  வரை எங்கள் அமைப்பின் சார்பில் நடவு செய்ய பட்டுள்ளது. 
மரக்கன்றுகள் நடவு செய்த பின்பு பராமரிப்பு செய்ய தனியார் அமைப்புகள் உதவி செய்ய வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி பராமரித்தால் எதிர் காலத்தில் ஆக்கிஜன் பற்றாக்குறையை போக்க முடியும் என்று கூறினார்.
News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.