பின்னர் தடம்புரண்ட ரயில் பெட்டியை தொழில்நுட்பp பணியாளர்கள் மூலம் சரி செய்யும் பணி தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சரக்கு ரயில் தடம் புரண்ட காரணத்தால் அவ்வழியே செல்லும் இதர சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை இயக்குவதில் அப்பகுதியில் சிறு தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இருப்பினும் தடம்புரண்ட ரயில் விரைவில் சீரமைக்கப்பட்டு ஜோலார்பேட்டை நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் என்றும், இதர ரயில்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட சிறு இடையூறுகள் சரிசெய்யப்பட்டு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் ரயில்வே பணியாளர்கள் தெரிவித்தனர்.