தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் பல்வேறுமக்கள் நற்பணிகள் செய்து வருகிறார்கள், இன்று தர்மபுரி பொம்மிடி கிளை சார்பாக பொதுமக்கள் சுமார் 280 நபர்களுக்கு பொம்மிடி நகர பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிப் பருகினர்.
பாலக்கோடு கிளை சார்பாக இன்று கொரானா எனும் கொடிய நோயிலிருந்து காக்க பொதுமக்கள் 300 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் கிளை செயலாளர் பாசில் மற்றும் யாசிர் நயீம் ஆகியோர் கலந்துகொண்டு கபசுர குடிநீர் வழங்கினார்கள் பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி பருகிய தோடு இந்த சேவையை பாராட்டி மகிழ்ந்தார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிகிச்சைக்கு உதவி கேட்டு வந்த சகோதரருக்கு இன்று திருப்பத்தூரை சேர்ந்த முபாரக் என்கின்ற சகோதரர் அவர்கள், கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை வந்திருந்தார், அவருக்கு இங்கிருந்து திருப்பத்தூர் செல்ல வாகன வசதி மற்றும் சாப்பாடு மற்றும் பழங்கள் சேர்த்து சுமார் 3 ஆயிரம் மதிப்புள்ள தொகை தர்மபுரி தவ்ஹீத் ஜமாத் சார்பாக வழங்கப்பட்டது.
Tags:
தருமபுரி