தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கோயிலில் பக்தர்கள் அனுமதிக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து நேற்று அமாவாசை என்பதால் வரலாற்றுப் புகழ் பெற்ற ராமாயண கால தொடர்புடைய தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு ராம தீர்த்தம் உள்ளிட்ட ஐந்து தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
Tags
அரூர்
