அடையலாம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி.


உத்தனப்பள்ளி அருகே உள்ள அளேசீபத்தை சேர்ந்தவர் நவேஷ்குமார் (வயது 33). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-உத்தனப்பள்ளி சாலையில் அளேசீபம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் நவேஷ்குமார் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார், அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நவேஷ்குமார் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form