மொரப்பூர் அருகே வி.ஐ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் பெங்களூருவில் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 கிராம் தங்க காசு, 10 வெள்ளி காசுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
பின்னர் அவர் இதுகுறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மொரப்பூர் காவல் ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் காவலர்கள் திருட்டுபோன வீட்டுக்கு சென்று பார்வையிட்டு மணிகண்டன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மொரப்பூர் அருகே குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (34). அரசு பள்ளி ஆசிரியர். இவர் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 9 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.
உடனடியாக அவர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் காவலர்கள் விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொடர் திருட்டு அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
மொரப்பூர்