தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் மாநில சட்ட உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் அருண்சித்தார்த் தலைமை வகித்தார்.மாநில செயலாளர் அழகுராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் அன்பில் ஜெயகார்த்தி, ஞானராஜ், பெருமாள், வீரணன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் பெருமான், மாவட்டச் செயலாளர் ஹரிதாஸ், துணைச் செயலாளர்கள் விஜயகுமார், சசி, நகரச் செயலாளர் நந்தகுமார், இணைச் செயலாளர் மோகன், பொருளாளர் செல்லதுரை மற்றும், ஒன்றிய, நகர, மாநில பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் இறுதியில் தர்மபுரி மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்புகள் ஏற்கப்பட்டது இவர்களுக்கு நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Tags
தருமபுரி
