நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரானா தடுப்பூசி முகாம் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரானா தடுப்பூசி முகாம் பன்னிகுளம் கிராமத்தில் நடத்தப்பட்டது இதில் நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்களுக்கு அவர்கள் பணிசெய்யும் இடத்திற்கே சென்று கொரோனா தடுப்பூசி  போடப்பட்டது இதில் 50 பணியாளர்கள் பயணடைந்தனர்.


இந்த மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றி . சுகாதார ஆய்வாளர் உதயகுமார், சுகாதார செவிலியர் அனிகிரிஸ்டி, மஸ்தூர் மகேஷ்குமார், ஆகியோர் பங்கேற்றனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form