தொங்கனூர் கிராமத்தில் சாலையில் பாலை ஊற்றி விவசாயிகள் போராட்டம்.

மொரப்பூர் ஜூன் 15, 



மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொங்கனூர் கிராமத்தில் உள்ள  ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் பால் ஊற்றும் விவசாயிகளிடம் பெறப்படும் பாலில் 300மிலி க்கு மேல் விவசாயிகளிடம் திருப்பி தருவதால், இதை நம்பி உள்ள தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அவர்கள் கொண்டு வந்த பாலை சாலையில் ஊற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து தருமபுரி மண்டல ஆவின் மேலாளரிடம் கேட்ட பொழுது சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து  தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form