சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை.

பாலக்கோடு முக்கிய சாலையில் இருந்து சரவணா தியேட்டர் செல்லும் வழியில், பூமிக்கு அடியில் செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டதை அடுத்து கசிவை சரிசெய்ய குழி பறிக்கப்பட்டது, 15 நாட்கள் முன்னர் பறிக்கப்பட்ட குழி இன்னும் மூடாமல், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது,  இந்த குழி போக்குவரத்திற்கும்  நடந்து செல்லவும் இடையூறு ஆக உள்ளதால் அக்குழியை உடனடியாக மூட பேரூராட்சி நிர்வாகத்திற்கோ அல்லது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பொறியாளருக்கோ  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு தக்க நடவடிக்கை உடனே எடுக்குமாறு வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form