இணையதளம் மூலம் நடைபெறும் பண மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
- பொதுமக்கள் தங்களின் Login விபரங்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது.
- சமூக வலைதளங்களில் வரும் போலியான விளம்பரங்களின் Link -ஐ பயன்படுத்தக்கூடாது.
- கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றி பயன்படுத்துவது சிறந்தது.
- தொலைபேசி மூலம் உங்களின் வங்கிக் கணக்கு விபரம் மற்றும் PAYTM கணக்கு விபரங்களை யாராவது கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
- கைரேகை மற்றும் PIN Security விபரமாக வைப்பது சிறந்தது.
- பொதுமக்கள் தங்களுக்குத் தெரியாத எண்களில் இருந்து வரும் SMS-ல் உள்ள Link மூலம் தங்களது போனில் anydesk, TeamViewer போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் இருத்தல் வேண்டும்.
- புகார்களை தெரிவிக்க cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.
Tags:
தருமபுரி