டென்சிங் நார்கே தேசிய சாகச விருது-2020 பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு, இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் சாகசங்கள் புரிந்தோர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2020-ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிலம், நீர், வான்வழி சாகசங்கள் நிகழ்த்தியவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதரவிவரங்களை https://dbtyas-youth.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை https://dbtyas-youth.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள். 05.07.2021 என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags:
தருமபுரி